ஜெட் விமானம் மூலம் மருத்துவமனை மீது சரமாரி குண்டு வீச்சு… 34 பேர் பலி

மியான்மர் மருத்துவமனை மீது ராணுவம்  நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.

மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், கிளர்ச்சியாளர்களின் ஆயுதப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அழிக்கப்பட்டது, இதில் 34 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு மாநிலமான ரக்கைனில் மராக்-யு டவுன்ஷிப்பில் உள்ள பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 80 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து ரக்கைனில் மீட்பு சேவைகளுக்கான மூத்த அதிகாரியான வை ஹுன் ஆங் கூறுகையில், ” ஒரு ஜெட் போர் விமானம் இரவு 9:13 மணிக்கு இரண்டு குண்டுகளை வீசியது. ஒன்று மருத்துவமனையின் மீட்பு வார்டைத் தாக்கியது. மற்றொன்று மருத்துவமனையின் பிரதான கட்டிடத்திற்கு அருகே தாக்கியது. இதில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என 17 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடத்தின் பெரும்பகுதி குண்டுவெடிப்புகளால் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவமனைக்கு அருகிலுள்ள டாக்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. மியான்மரின் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. ரக்கைனில் மக்களுக்கு இந்த மருத்துவமனை தான் உதவிகரமாக இருந்தது” என்று கூறினார். மருத்துவமனை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts

முன்னாள் சபாநாயகர் அதிரடியாக கைது: விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு

வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல காவல்துறையினரால் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணம் செய்த வாகனம் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு…

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானின் வடகிழக்குப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அது 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *