அதிகாலையில் இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 15)  அதிகாலை 1.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.39 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.24 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக ஆகஸ்ட் 2025-ல் சம்பா மாவட்டத்தில் 3.3 மற்றும் 4.0 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதிவாகின, இது பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தியது, எனினும், எதிர்காலத்தில் 8.0 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஓர் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, எனவே இப்பகுதி நிலநடுக்க அபாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்குகள் நீக்கம்: மம்தா தொகுதியில் எவ்வளவு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மூலம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொகுதியில் 4 மடங்கு அதிக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவருக்கு வயது 91. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகராட்சி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சிவராஜ் பாட்டீல், லத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *