முதல்வரை உற்சாகமாக வரவேற்ற மதுரை மக்கள் – செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்றார்.

முல்லை பெரியாறு – லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.


அதனைதொடர்ந்து, விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


இவ்விழாவில் பங்கேற்பதற்காக வந்த முதல்வருக்கு பொதுமக்களும், திமுகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


முன்னதாக, மதுரை மாவட்டம் சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

Related Posts

தமிழக பாஜகவிற்கு கேரளா வெற்றி தந்த உற்சாகம்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக…

பாமகவில் ஏற்பட்ட பிரச்னைக்கு யார் காரணம்?: ஜி.கே.மணி மனந்திறந்த பேட்டி

அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடக்கும் அதிகார போட்டிகாரணமாக கட்சி இருபிரிவுகளாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *