ஓ.பன்னீர்செல்வத்திற்கு கதவு திறக்குமா?- இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்!

சென்னையை அடுத்த வானகரத்தில் பரபரப்பான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, அதிமுக மூத்த தலைவர்கள் பலரும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தவெகவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், அதிமுகவின் பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால் டிசம்பர் 15-ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார்.

இதன் பின் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக அமித்ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 10) நடைபெறுகிறது. இதில், சட்​டமன்ற தேர்​தல் குறித்​து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமார் 5,000 பேர் பங்கேற்ற உள்ளதாக தெரிகிறது. சுமார் 10,000 பேருக்கு அசைவ உணவு தயார் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

Related Posts

மீண்டும் ஒரு விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை – காரணம் என்ன..?

கணவர், மனைவிக்கும் இடையேயான சண்டையில் விஜய் டிவி சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீரியல் நடிகை விஜய் டிவி சீரியல்களான “சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி” போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில்…

முன்னாள் சபாநாயகர் அதிரடியாக கைது: விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு

வாகன விபத்தை ஏற்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல காவல்துறையினரால் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணம் செய்த வாகனம் சபுகஸ்கந்த பகுதியில் ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *