திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல் மூன்று மணிநேரம் ஏற்படுகிறது. வரிசையில் பக்தர்கள் ஆங்காங்கே தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, 50 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்துவது குறித்தும், காலையில் 1 மணி நேரம் மற்றும் மாலையில் 1 மணி நேரம் பிரேக் தரிசனத்தை அமல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

  • Related Posts

    கர்நாடகாவில் பயங்கரம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி

    கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பல மாதங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹோசஹள்ளி கிராமத்தில்…

    மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வெடிக்கும்- கிலி ஏற்படுத்தியவர் கைது

    மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *