திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போனுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல் மூன்று மணிநேரம் ஏற்படுகிறது. வரிசையில் பக்தர்கள் ஆங்காங்கே தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, 50 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்துவது குறித்தும், காலையில் 1 மணி நேரம் மற்றும் மாலையில் 1 மணி நேரம் பிரேக் தரிசனத்தை அமல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

  • Related Posts

    வருகிறது விநாயகர் சதுர்த்தி: 69 அடியில் தயாராகும் பிரம்மாண்ட சிலை

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத்தில் 69 அடியில் பிரம்மாண்ட விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைத்து கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ம் ஆண்டு…

    பவுர்ணமி கிரிவலம் போலாமா? – திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

    பவுர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு படையெடுப்பார்கள். இந்த மாத பவுர்ணமி கிரிவலம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *