
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை கொண்டுசெல்ல தடைவிதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்துக்கு சாதாரண நாட்களில் கூட 2 முதல் மூன்று மணிநேரம் ஏற்படுகிறது. வரிசையில் பக்தர்கள் ஆங்காங்கே தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, 50 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்துவது குறித்தும், காலையில் 1 மணி நேரம் மற்றும் மாலையில் 1 மணி நேரம் பிரேக் தரிசனத்தை அமல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.