பிரியாணி பிரியரா நீங்க… மறைந்துள்ள ஆபத்துகள்… எச்சரிக்கும் மருத்துவர்…

Biryani Health Risk s| நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு அளவை பொருத்தே நம்முடைய உணவு பயன்பாடு அமைய வேண்டும்.அதை தவிர்த்து விட்டு கொழுப்பு அதிகம் உள்ள பிரியாணியை போன்ற உணவு வகைகளை  தேடிச் செல்லும் பொழுது தான் நமக்கு அது பிரச்சினையாக வந்து விடுகிறது .

உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ அதே அளவுக்கு இரவு நேர பிரியாணி கடைகள் பெருகிவிட்டன. பெரும்பாலும் அனைவருக்குள்ளும் Mid -Night Cravings கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது.

கொழுப்பும், எண்ணெயும் அதிகமுள்ள பிரியாணி நிச்சயமாக மாரடைப்பை அழைத்து வர முக்கிய காரணியாக உள்ளது. கடைகளில், பலமுறை பயன்படுத்திய எண்ணெயில் பிரியாணி செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் எச்சரித்துள்ளனர். இருந்தும் கூட ‘தீவிர பிரியாணி பிரியர்கள் நம்மில் பலர் உண்டு.’ பிரியாணி சாப்பிடுவது தவறில்லை. ஆனால் எப்போது சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? என்ற உணவு கட்டுப்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒரு நாள் என்பதே போதுமானது என்கிறார். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மற்றும் உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதய அறிவியல் துறைத் தலைவர் செஸ்லி மேரி மெஜிலா “நம்முடைய விருப்பத்திற்காக என்றாவது ஒரு நாள் மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது உடல்நிலைக்கு நல்லது இல்லை. ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இது அனைத்தும் சேர்ந்துதான் மாரடைப்புக்கான முக்கிய காரணமாக அமைகின்றது.

  • Related Posts

    கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சியா விதை..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!

    நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த சியா விதைகளை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக சேர்த்து கொள்வது நம்முடைய முக்கிய உள்ளுறுப்பான கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். சியா விதைகள் பொதுவாக ஸ்மூத்திகளின் மேலே தெளிக்கப்படுகின்றன, சாலட்ஸ்களில் சேர்க்கப்படுகின்றன, புட்டிங்கில் ஊற வைக்கப்படுகின்றன.…

    ஒரே ஒரு துளி இரத்தம் போதும்…உங்கள் ஆயுட்காலத்தை நொடியில் தெரிந்துக்கொள்ளலாம்..!

    ஒரே ஒரு இரத்த மாதிரியை கொண்டு மனித ஆயுளை மதிப்பீடு செய்யும் புதிய பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். வயதாகும் செயல்முறை ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும் உடல் மற்றும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *