பிரியாணி பிரியரா நீங்க… மறைந்துள்ள ஆபத்துகள்… எச்சரிக்கும் மருத்துவர்…

Biryani Health Risk s| நம்முடைய உடலில் உள்ள கொழுப்பு அளவை பொருத்தே நம்முடைய உணவு பயன்பாடு அமைய வேண்டும்.அதை தவிர்த்து விட்டு கொழுப்பு அதிகம் உள்ள பிரியாணியை போன்ற உணவு வகைகளை  தேடிச் செல்லும் பொழுது தான் நமக்கு அது பிரச்சினையாக வந்து விடுகிறது .

உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ அதே அளவுக்கு இரவு நேர பிரியாணி கடைகள் பெருகிவிட்டன. பெரும்பாலும் அனைவருக்குள்ளும் Mid -Night Cravings கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது.

கொழுப்பும், எண்ணெயும் அதிகமுள்ள பிரியாணி நிச்சயமாக மாரடைப்பை அழைத்து வர முக்கிய காரணியாக உள்ளது. கடைகளில், பலமுறை பயன்படுத்திய எண்ணெயில் பிரியாணி செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் எச்சரித்துள்ளனர். இருந்தும் கூட ‘தீவிர பிரியாணி பிரியர்கள் நம்மில் பலர் உண்டு.’ பிரியாணி சாப்பிடுவது தவறில்லை. ஆனால் எப்போது சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? என்ற உணவு கட்டுப்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒரு நாள் என்பதே போதுமானது என்கிறார். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மற்றும் உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதய அறிவியல் துறைத் தலைவர் செஸ்லி மேரி மெஜிலா “நம்முடைய விருப்பத்திற்காக என்றாவது ஒரு நாள் மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது உடல்நிலைக்கு நல்லது இல்லை. ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். இது அனைத்தும் சேர்ந்துதான் மாரடைப்புக்கான முக்கிய காரணமாக அமைகின்றது.

  • Related Posts

    நகர்ப்புற பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவுத் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் கடந்த 15.9.2022 அன்று…

    ஆம்புலன்ஸ் டிரைவர்களைத் தாக்கினால் 10 ஆண்டு சிறை- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *