அப்பலோவில் அனுமதி- பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு என்ன ஆச்சு?

பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி.கே. மணி வானகரம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினரான இவர் பாமக நிறுவன தலைவர் ஜி.கே.மணிக்கும், அவரது மகன் ராமதாஸ்க்கும் இடையே நடக்கும் மோதலை தீர்ப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் தருமபுரியில் நேற்று இரவு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஜி.கே.மணி சென்றிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாகவும், முதுகு தண்டு வலிப்பதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து வருன்றனர். அவரது உடல்நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Posts

திமுக ஆட்சியில் தெற்கு தேய்கிறது- நயினார் நாகேந்திரன் திடீர் டென்ஷனுக்கு காரணம்?

தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் தமிழக அரசு முற்றிலுமாக அழித்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் இன்று அறிக்கை…

உசிலம்பட்டியில் மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து- கணவன், மனைவி பலி

உசிலம்பட்டி அருகே இன்று அதிகாலை சாலையோர மரத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் இன்று அதிகாலையில் சாலையோர மரத்தில் மோதி கார் ஒன்று விபத்திற்குள்ளானது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *