அப்பலோவில் அனுமதி- பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு என்ன ஆச்சு?

பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி.கே. மணி வானகரம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினரான இவர் பாமக நிறுவன தலைவர் ஜி.கே.மணிக்கும், அவரது மகன் ராமதாஸ்க்கும் இடையே நடக்கும் மோதலை தீர்ப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் தருமபுரியில் நேற்று இரவு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஜி.கே.மணி சென்றிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாகவும், முதுகு தண்டு வலிப்பதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து வருன்றனர். அவரது உடல்நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *