1,000 அடி அளவிற்கு மெகா சுனாமி அலைகள் தாக்கும்- அமெரிக்காவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அமெரிக்கா மேற்கு கடற்கரையை 1,000 அடி சுனாமி அலைகள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்சன் மண்டலத்தில் 1,000 அடி உயர மெகா சுனாமி அலை ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளை 6.5 அடி வரை திடீரென தாழ்த்தி, வெள்ளப் பரப்பை விரிவாக்கி, சியாட்டில், போர்ட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களை நிமிடங்களில் மூழ்கடிக்கக் கூடிய பேரலைகள் உருவாக்கலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சுனாமி பேரலையால் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஏற்படும் என்றும், 1,70,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடையும் என்றும், 81 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தலாம் என விர்ஜினியா டெக் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.  தெற்கு வாஷிங்டன், வடக்கு ஒரிகான், வடக்கு கலிபோர்னியா ஆகிய நகரங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக உள்ளன. அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகியலையும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை அபாயங்கள் காரணமாக ஆபத்தில் உள்ள.

எனவே, ஆரம்ப எச்சரிக்கையை அடுத்து வலுவான கட்டமைப்புகள், மற்றும் அவசர தயார்நிலை பயிற்சிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், அடுத்ததாக எட்டு புள்ளி அளவு நிலநடுக்கம் ஏற்பட 15 சதவீத வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் எட்டு புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட 15 சதவீத வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *