தொடர் விடுமுறை எதிரொலி- கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்

சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06027) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 8.30 மணிக்கு வந்தடையும்.

அதே போல், போத்தனுரில் இருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06028) ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். சென்னை- போத்தனூர் சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

நடுவானில் விமானத்தில் கோளாறு- 150 பயணிகள் உயிர் தப்பியது எப்படி?

150 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  நேற்று இரவு…

அதிர்ச்சி…புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் மீது பாய்கிறது எஸ்மா!

8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆர்டிசி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *