தொடர் விடுமுறை எதிரொலி- கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்

சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06027) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 8.30 மணிக்கு வந்தடையும்.

அதே போல், போத்தனுரில் இருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06028) ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். சென்னை- போத்தனூர் சிறப்பு ரயில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின்  சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…

வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *