உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: 2 நாட்களில் விசாரணை!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இரண்டு நாட்களில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் காவல்துறையின் தடையை மீறி இரண்டு நாட்களாக தீபம் ஏற்ற முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய அந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று (டிசம்பர் 5) தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு வழக்கு நடைமுறைப்படி இரண்டு நாட்களில் விசாரணைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு டிசம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

‘ஆண்டாள் வேட தமிழச்சி அப்போது எங்கே போனார்?’: அர்ஜுன் சம்பத் கேள்வி!

கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தி பேசியபோது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை திமுக எம்,பியும், தமிழ்நாடு நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான …

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆபத்து: எச்சரிக்கும் விஹெச்பி!

தமிழக அரசின் செயல்பாடுகளாலும், அலட்சியத்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்​கணக்​கான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *