திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆபத்து: எச்சரிக்கும் விஹெச்பி!

தமிழக அரசின் செயல்பாடுகளாலும், அலட்சியத்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்​கணக்​கான பக்தர்கள் கடல் தீர்த்த கட்​டத்​தி​லும், நாழி கிணற்​றி​லும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்​கின்​றனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக திருச்செந்தூர் கோயில் கடல் முகப்பில் பக்தர்கள் புனித நீராடக் கூடிய இடத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு 3 அடி முதல் 6 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடல் அலையின் வேகத்தில் மாற்றம் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர். நாட்கள் செல்லச் செல்ல இது சாதாரண நிலைக்கு சென்று விடும் என்றும் கூறினர்.

இந்த நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகளாலும், அலட்சியத்தாலும் தான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ” சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில கி.மீ தூரத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு காரணமாக கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு கோயில் அருகே கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இந்நிலை நீடித்தால் கோயிலுக்குப் பாதுகாப்பில்லை. பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராட முடியாத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக கடலுக்குள் அமைக்கப்பட்ட இந்நிலை நீடித்தால் கோயிலுக்கு பாதுகாப்பில்லை. பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராட முடியாத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக கடலுக்குள் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவை மாற்றி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

தமிழக பாஜகவிற்கு கேரளா வெற்றி தந்த உற்சாகம்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக…

பாமகவில் ஏற்பட்ட பிரச்னைக்கு யார் காரணம்?: ஜி.கே.மணி மனந்திறந்த பேட்டி

அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடக்கும் அதிகார போட்டிகாரணமாக கட்சி இருபிரிவுகளாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *