
மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் செப்.11-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் வருகிற செப்.11-ம்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி, மதுரையில் இருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் (வண்டி எண்-20671, 20672) வருகிற 11-ம் தேதி முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
அதே போல, மங்களூரு சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் (வண்டி எண் 20631, 20632) வருகிற செப்.9-ம் தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..