உச்சம் தொட்டம் தங்கம் விலை: ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்வு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்ததால் ஒரு சவரன் 74,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இந்தியாவில் சர்வதேச அளவிலான வணிகச் சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து அதிகபட்சமாக 75,760 ரூபாயாக உயர்ந்தது. கடந்த 8- ம் தேதி வரலாற்றில் உயர்ந்த உட்சபட்ச இந்த விலை உயர்வை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 20- ம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் 9,180 ரூபாய்க்கும், சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 73,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 9,315 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?- வெளியான அதிர்ச்சி தகவல்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உலக நாடுகளில் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இந்தியர்கள் உள்ளனர். திருமணம், காதணி விழா, பிறந்த நாள் விழா என அத்தனை விழாக்களிலும்…

தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகை  நேற்று (அக்.20)  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *