குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட ராஜ்நாத் சிங்!

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர், தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். இந்த பதவிக்கு போட்டி இருக்​கும் பட்சத்​தில், செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. குடியரசு துணைத்தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்பின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராகமகாராஷ்டிரா ஆளுநர் சி.வி.ராதாகிருஷ்ணனின் பெயரை பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா அறிவித்தார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதார குடியரசு துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடடம் ஆலோசித்திருப்பதாக நட்டா தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் இன்று தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *