குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட ராஜ்நாத் சிங்!

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர், தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். இந்த பதவிக்கு போட்டி இருக்​கும் பட்சத்​தில், செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. குடியரசு துணைத்தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்பின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராகமகாராஷ்டிரா ஆளுநர் சி.வி.ராதாகிருஷ்ணனின் பெயரை பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா அறிவித்தார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதார குடியரசு துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடடம் ஆலோசித்திருப்பதாக நட்டா தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் இன்று தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *