ஷாக்… விமானம் மீது விமானம் மோதி பயங்கர விபத்து!

அமெரிக்காவில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்ற விமானத்தில் மோதி பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹெலினாவிலிருந்து வடமேற்கே சுமார் 200 மைல் தொலைவில் வடமேற்கே மொன்டானாவில் கலிஸ்பெல் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் சிறிய வகை பயணிகள் விமானம் தரையிறங்கியது. அப்போது திடீரென ஓடுபாதையில் இருந்த விமானத்தின் மீது அந்த சிறிய வகை விமானம் மோதியதால் தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து விரைந்து வந்த கலிஸ்பெல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

கலிஸ்பெல் காவல் துறையின் அறிக்கையின்படி, விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதன் விளைவாக ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சேர்ந்த விமானத்தில் இருந்த நான்கு பயணிகளும் சிறிய காயங்களை மட்டுமே சந்தித்ததாகவும், சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் கலிஸ்பெல் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து எஃப்ஏஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகின்றன.

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *