ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவு

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரான ஷிபு சோரன்  உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் இன்று காலை 8.56 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ஷிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். எட்டுமுறை மக்களவை உறுப்பினராக இருந்த ஷிபு சோரன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தற்போதைய ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.

பழங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்த தலைவரா ஷிபு சோரனின் மறைவு அம்மாநில மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையின் மறைவையொட்டி ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சோரன் தனது தந்தையின் மரணச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அவரது பதிவில், “அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

இறந்த தந்தையின் கடைசி விருப்பம்- நிறைவேற்றிய ஐந்து மகள்கள்!

கான்பூரில் இறந்த தந்தையின் உடலை அவரது 5 மகள்கள் தோளில் சுமந்து சென்றதுடன், அவரது கடைசி விருப்பதையும் நிறைவேற்றி வைத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆர்.கே.திவாரி. இவர் ஐஐடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பிரியங்கா,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *