ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் மறைவு

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரான ஷிபு சோரன்  உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் இன்று காலை 8.56 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ஷிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். எட்டுமுறை மக்களவை உறுப்பினராக இருந்த ஷிபு சோரன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தற்போதைய ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.

பழங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்த தலைவரா ஷிபு சோரனின் மறைவு அம்மாநில மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையின் மறைவையொட்டி ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரான ஹேமந்த் சோரன் தனது தந்தையின் மரணச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். அவரது பதிவில், “அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

உத்தராகண்டை உலுக்கிய மேகவெடிப்பு- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

உத்தராகண்ட் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில்…

கனமழையால் சோகம்: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு

டெல்லியில் விடிய விடிய மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் உள்பட எட்டு பேர் பலியான சோக நிகழ்வு நடைபெற்றுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *