நாடாளுமன்றம் அருகே பரபரப்பு- தமிழக பெண் காங்கிரஸ் எம்.பியிடம் நகைபறிப்பு

டெல்லியில் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியிடம் மர்மநபர் 4.5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பங்கேற்றுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருநதார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், சுதா கழுத்தில் கடந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஆனால், அவருடன் சுதா போராடினார். ஆனாலும், சுதா கழுத்தில் கிடந்த 4.5 சவரன் தங்கச்செயினை மர்மநபர் பறித்துச் சென்றார். இந்த சம்பவத்தில் சுதா கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாணக்யபுரி காவல் நிலையத்தில் சுதா எம்.பி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சருக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ளார். டெல்லி நாடாளுமன்றம் அருகே தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பியிடம் நகைபறிப்பு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *