நாடாளுமன்றம் அருகே பரபரப்பு- தமிழக பெண் காங்கிரஸ் எம்.பியிடம் நகைபறிப்பு

டெல்லியில் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியிடம் மர்மநபர் 4.5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பங்கேற்றுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருநதார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், சுதா கழுத்தில் கடந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஆனால், அவருடன் சுதா போராடினார். ஆனாலும், சுதா கழுத்தில் கிடந்த 4.5 சவரன் தங்கச்செயினை மர்மநபர் பறித்துச் சென்றார். இந்த சம்பவத்தில் சுதா கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாணக்யபுரி காவல் நிலையத்தில் சுதா எம்.பி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சருக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ளார். டெல்லி நாடாளுமன்றம் அருகே தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பியிடம் நகைபறிப்பு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் பரபரப்பு- 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி…

நெல்லையில் அவதூறு பேச்சு- ஷியாம் கிருஷ்ணசாமி மீது வழக்கு

நெல்லை கவின் கொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *