நாடாளுமன்றம் அருகே பரபரப்பு- தமிழக பெண் காங்கிரஸ் எம்.பியிடம் நகைபறிப்பு

டெல்லியில் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியிடம் மர்மநபர் 4.5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பங்கேற்றுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருநதார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், சுதா கழுத்தில் கடந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஆனால், அவருடன் சுதா போராடினார். ஆனாலும், சுதா கழுத்தில் கிடந்த 4.5 சவரன் தங்கச்செயினை மர்மநபர் பறித்துச் சென்றார். இந்த சம்பவத்தில் சுதா கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாணக்யபுரி காவல் நிலையத்தில் சுதா எம்.பி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சருக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ளார். டெல்லி நாடாளுமன்றம் அருகே தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பியிடம் நகைபறிப்பு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

ஷாக்…. பிரபல மருத்துவமனையில் நர்ஸ் மர்ம சாவு!

பிரபல தனியார் மருத்துவமனையின் குளியலறையில் நர்ஸ் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் சந்திரசேகர் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி ரவுத் என்ற…

சாத்தூர் அருகே பயங்கரம்- பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன் . இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *