அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – தலைமறைவான ஆசிரியர்

தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து, தலைமறைவான அரசுப்பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

தருமபுரி நகர்பகுதிக்கு அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் குமரேசன் என்பவர் ஆங்கில அரசிரியராக பணியாற்றி வந்தார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

இவர் 7ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அரசு பள்ளி மாணவிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, சில மாணவிகளிடம் ஆசிரியர் குமரேசன் தவறாக நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போக்சோ வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறைமினர் ஆசிரியர் குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான ஆசிரியர் குமரேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Posts

கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி சிறுநீரகத்தை இழந்த விவசாயி!

கந்து வட்டிக்காரர்கள் மிரட்டலால் தனது சிறுநீரகத்தை 8 லட்ச ரூபாய்க்கு விவசாயி விற்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ,சந்திராபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன். தனது தொழில் நஷ்டமடைந்ததால் பால் வியாபாரம் செய்ய ரோஷன் முடிவு செய்தார். இதற்காக உள்ளூரை…

கணவரை தாக்கிவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை – தப்பியோடிய போதை இளைஞர்களை தேடும் போலீசார்

ராமேஸ்வரத்தில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுபோதை இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தை அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஆரோக்கியம். இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு  தேவையான பொருட்களை வாங்கிக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *