தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும்: நயினார் நாகேந்திரன் பகீர்!

பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல், தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசியில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமையும். தீவிர வாக்காளர் பட்டியல் சேர்ப்பு (எஸ்ஐஆர்) விவகாரத்தை வைத்து திமுகவினர் மக்களை குழப்புகின்றனர். பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல, தமிழ்நாட்டில் சுமார் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்படும் என்று தெரிகிறது.

இதில் 2002-ம் ஆண்டுக்குப பின்னர் இறந்தவர்களின் வாக்குகளே இருக்கும். உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் வாக்குகள் இறந்தவர்களின் பெயரில் உள்ளன. அவற்றை நீக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Related Posts

“விஜய் எனது சக தோழர்!” – தவெகவில் இணைந்த சவுக்கு சங்கரின் நண்பர்

பிரபல டிஜிட்டல் பத்திரிகையாளரும், தற்போது சிறையிலுள்ள சவுக்கு சங்கரின் நண்பருமான பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் சேனலில் அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார், பெலிக்ஸ் ஜெரால்டு.…

அதிவேகமாக வந்த ரயில் மோதி 8 யானைகள் பலி: மூடுபனி காரணமா?

அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு குட்டி யானை படுகாயமடைந்தது. அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாய்ராங்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சாங்ஜுராய் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக்கூட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *