TNEA | பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியீடு

இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 374 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 946 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். அதன் அடிப்படையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது.

  • Related Posts

    தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு- மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு

    10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக,…

    AI தொழில்நுட்பத்தில் பாடப்புத்தகம் அறிமுகம்… அசத்திய மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!!

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *