
இளநிலைப் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 374 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 946 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். அதன் அடிப்படையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது.