AI தொழில்நுட்பத்தில் பாடப்புத்தகம் அறிமுகம்… அசத்திய மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையில் அவசியமானதாகவும் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுகிறது.
இந்த நிலையில் வருங்காலத்தில் AI தொழில் நுட்பத்தின் அவசியம் கருதி கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படைய செய்வதற்காக பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு AI பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி AI செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை திறந்து வைத்து பள்ளி ஆசிரியர்களே உருவாக்கிய AI பாட புத்தகத்தையும் பள்ளி நிர்வாகம் வெளியிட்டது.
முன்னதாக பள்ளியின் கலையரங்கில் பள்ளியின் இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் மற்றும் முனைவர் சுரேஷ் மாணாக்கர்கள் ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் AI பாட புத்தகத்தை வெளியிட்டனர். பின்னர் வளர்ச்சி அதன் செயல்பாடு அதன் முக்கியத்துவத்தை குறித்து முனைவர் சுரேஷ் பாபு மாணாக்கர்களிடம் விரைவாக எடுத்துரைத்தார். பின்னர் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை திறந்து வைத்து ஆய்வகத்தை பார்வையிட்டனர்.

  • Related Posts

    நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

    தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

    பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு

    தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *