ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி..! உலக தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
3 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு சென்றார். கனடாவில் உள்ள கனனஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற 51ஆவது ஜி7 மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், உலக நாடுகளின் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாநாட்டின் இடையே, தென்கொரிய அதிபர் லீ ஜாவே-மியூங்கை சந்தித்துப் பேசினார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *