“அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை செய்வதை இந்தியா விரும்பவில்லை…” – பிரதமர் மோடி கறார்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
கனடாவில் நடந்த ஜி7 உச்சமாநாட்டில் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அமெரிக்க அதிபர் டரம்ப் புறப்பட்டுச் சென்றதால் அவருடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தோட்டாக்களை பயன்படுத்தினால், இந்தியாவும் பதிலுக்கு தோட்டாக்களைத் தான் பயன்படுத்தும் என்றும் டிரம்பிடம் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்கா செய்வதை இந்தியா விரும்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

  • Related Posts

    நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

    விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *