“அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை செய்வதை இந்தியா விரும்பவில்லை…” – பிரதமர் மோடி கறார்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
கனடாவில் நடந்த ஜி7 உச்சமாநாட்டில் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அமெரிக்க அதிபர் டரம்ப் புறப்பட்டுச் சென்றதால் அவருடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தோட்டாக்களை பயன்படுத்தினால், இந்தியாவும் பதிலுக்கு தோட்டாக்களைத் தான் பயன்படுத்தும் என்றும் டிரம்பிடம் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்கா செய்வதை இந்தியா விரும்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

  • Related Posts

    வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

    நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

    ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

    பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *