“ஈரான் சரணடையாது..” – அமெரிக்காவை எச்சரித்த கமேனி

“ஈரானிய தேசத்தால் சரணடைய முடியாது என்பதையும், அவர்களின் எந்தவொரு இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று தனக்கு தெரியும் எனவும், அவர் எளிதான இலக்கு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். அவரை கொல்லப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமேனி, ‘போர் தொடங்கி விட்டது’ என பதிவிட்டார். அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்திருந்தார்.
  • Related Posts

    ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

    பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

    தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *