சர்வதேச விண்வெளி ஆய்வு மையப் பயணம்… மீண்டும் தள்ளி வைப்பு

இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 என்ற விண்வெளி பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு, ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த மே 29 ஆம் தேதி இவர்கள் செல்ல இருந்த பயணம், திடீரென கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 8 மற்றும் 10 ஆம் தேதிகளிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *