சர்வதேச விண்வெளி ஆய்வு மையப் பயணம்… மீண்டும் தள்ளி வைப்பு

இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 என்ற விண்வெளி பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு, ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த மே 29 ஆம் தேதி இவர்கள் செல்ல இருந்த பயணம், திடீரென கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 8 மற்றும் 10 ஆம் தேதிகளிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

  • Related Posts

    வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

    நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

    ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

    பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *