சர்வதேச விண்வெளி ஆய்வு மையப் பயணம்… மீண்டும் தள்ளி வைப்பு

இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 என்ற விண்வெளி பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு, ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த மே 29 ஆம் தேதி இவர்கள் செல்ல இருந்த பயணம், திடீரென கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 8 மற்றும் 10 ஆம் தேதிகளிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

  • Related Posts

    நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

    விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *