
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
3 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸைத் தொடர்ந்து, கனடாவுக்கு சென்றார். கனடாவில் உள்ள கனனஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் நடைபெற்ற 51ஆவது ஜி7 மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், உலக நாடுகளின் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாநாட்டின் இடையே, தென்கொரிய அதிபர் லீ ஜாவே-மியூங்கை சந்தித்துப் பேசினார். மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.