80 நாட்களில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு… கர்நாடகா முதல்வர் சித்தராமையா தகவல்

கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, இது மத்திய அரசின் கணக்கெடுப்பிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் 162 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 2015இல் நடந்த கணக்கெடுப்பு காலாவதி ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அவர், கணக்கெடுப்பு நடத்த 80 நாட்கள் வரை ஆகும் என நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Related Posts

    விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

    விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட…

    ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

    ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *