80 நாட்களில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு… கர்நாடகா முதல்வர் சித்தராமையா தகவல்

கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, இது மத்திய அரசின் கணக்கெடுப்பிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் 162 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 2015இல் நடந்த கணக்கெடுப்பு காலாவதி ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அவர், கணக்கெடுப்பு நடத்த 80 நாட்கள் வரை ஆகும் என நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Related Posts

    28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

    28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

    இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

    நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *