80 நாட்களில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு… கர்நாடகா முதல்வர் சித்தராமையா தகவல்

கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் சித்தராமையா, இது மத்திய அரசின் கணக்கெடுப்பிலிருந்து வித்தியாசமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் 162 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 2015இல் நடந்த கணக்கெடுப்பு காலாவதி ஆகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அவர், கணக்கெடுப்பு நடத்த 80 நாட்கள் வரை ஆகும் என நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Related Posts

    நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!

    சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…

    வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

    வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *