“ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்…” – உச்சநீதிமன்றம்

ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும் ஏடிஜிபி ஜெயராமை, பணியிடை நீக்கம் செய்தது, அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஆணையிட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் மற்றும் மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆள் கடத்தல் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது தவறானது என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

  • Related Posts

    விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

    விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட…

    ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

    ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *