இந்திக்கு மகாராஷ்டிராவில் எழுந்த கடும் எதிர்ப்பு… உத்தரவை திரும்ப பெற்ற அரசு

கடும் சர்ச்சை எழுந்த நிலையில் மகாராஷ்டிரா தொடக்கப் பள்ளிகளில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியில் இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தி கட்டாய பாடம் என்ற அறிவிப்பை திருத்தியுள்ள மாநில கல்வி வாரியம், புதிய சுற்றறிக்கையை அளித்துள்ளது.
அதன்படி இந்தி இனி மகாராஷ்டிராவில் கட்டாயமான மூன்றாவது மொழியாக இருக்காது. மாணவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு இந்திய மொழி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Related Posts

    விருதுக்காக ஒரு குறும்படம்- மதுரையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது!

    விருதை இலக்காக வைத்து மதுரையில் குறும்பட பூஜை தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோயிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையில் குறும்பட…

    ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’ – எப்போது எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

    ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *