சிறார் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் புகார்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறார் இல்லத்தில் 6 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவர் இல்லத்தில் இருந்த மேற்பார்வையாளர் 6 சிறுவர்களை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர், மேலும் வேறு ஏதும் சிறுவர்கள் யாரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் குற்றம் அரங்கேறிய சிறுவர் இல்லத்தில் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *