மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் – அதிமுக ஆதரவு

மதுரையில் இருந்து அரசியல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்க  உள்ளார். இந்த தொடக்க விழா கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அரசியல் தலைவர்- அரசியல் பிரச்சாரம்

தற்போது, தமிழகத்தில் அடுத்தாண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் அரசியல் பிரச்சார பயணங்களை தொடங்கி உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அன்புமணி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் அரசியல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார்.

தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்

தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

இதற்கான தொடக்க விழா, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகங்களும்; கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகளும்; தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அடுத்தக் கட்டமாக நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து, பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *