மலேசியா ஆசிய அழகுக்கலை போட்டியில் 5 பதக்கங்களை அள்ளிய இலங்கை!

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள் கிடைத்தன.

மலேசியாவில் ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்கரப் போட்டியில் நடைபெற்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த அழகுக்கலை மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்‌ஷனா பியூட்டி கெயா அன்ட் அகாடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.

அதே போல இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்த எல்.தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன. இலங்கையைச் சேர்ந்த 7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 5 பதக்கங்களை அள்ளியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *