தேர்வு கிடையாது…அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (டிஎன்எஸ்டிசி) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி 1588 பட்டதாரி பயிற்சியாளர்கள் (பொறியியல்/தொழில்நுட்பம்), தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளமோ) பயிற்சியாளர்கள், பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”

அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *