ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இடது காலை இழந்தார்.

இது தொடர்பான வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 13 நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் அவர்கள் ரூ. 40 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். எஸ். ரமேஷ், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.

Related Posts

விஜய்யை பாஜக தான் இயக்குகிறது- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை…

சிவகங்கை அரசு விடுதியில் கட்டாய மதமாற்றம்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் உள்ள மாணவிகளை மதமாற்றம் செய்யும் விடுதி காப்பாளரை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *