ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் நஷ்டஈடு

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர் சிங். இவர் பேட்டரி கடை வைத்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து இடது காலை இழந்தார்.

இது தொடர்பான வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 13 நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் அவர்கள் ரூ. 40 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர். எஸ். ரமேஷ், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.

Related Posts

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி…அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

கடலூரில் பாம்பு கடித்தவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *