சீனாவில் மோடி-விளாடிமிர் புதின் சந்திப்பு – உறுதி செய்தது ரஷ்யா!

சீனாவில் இந்திய பிரதமர்  மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது என்பதை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் வர்த்தகம், நிதி பங்களிப்பு, முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி சீனா செல்கிறார். அங்குள்ள தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சீனா சென்று அந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளார். மொத்தம் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, ‘ செப்.1-ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப்பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது’ என்று கூறினார்.

 

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *