சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி- ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், கண்ணகி நகரில் வேலைக்குச் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததில் தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் சம்பவ இடத்திலேயே நேற்று பலியானார். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், வரலட்சுமி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது உறிவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில் 10 லட்ச ரூபாய், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் 10 லட்ச ரூபாய் என  20 லட்ச ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *