சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி- ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், கண்ணகி நகரில் வேலைக்குச் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்ததில் தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் சம்பவ இடத்திலேயே நேற்று பலியானார். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், வரலட்சுமி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவரது உறிவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சார்பில் 10 லட்ச ரூபாய், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் 10 லட்ச ரூபாய் என  20 லட்ச ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *