திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டம்: நாளை கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(ஆகஸ்ட் 23) ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த விழாவின் 7-ம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்திலும், 8-ம் நாளில் சுவாமி சண்முகர் பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான   திருத்தேரோட்ட திருவிழா நாளை காலை 7-00 மணிக்குமேல் 7-30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வருகிறது.

Related Posts

கர்நாடகாவில் பயங்கரம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குள் லாரி புகுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பல மாதங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹோசஹள்ளி கிராமத்தில்…

மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வெடிக்கும்- கிலி ஏற்படுத்தியவர் கைது

மும்பையில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடப்பட்ட சம்பவத்தில் பிஹாரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 34 வாகனங்களில் வரும் 14 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *