
திருச்சூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.ஆர்.ஷாஜி இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன. அதேபோல பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில், கடந்த மக்களவை தேர்தலில் 48 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று போனார்கள். அந்த தொகுதிகளிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளது. பெங்களூரு மத்திய தொகுதியை போல், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் கே..ஆர்.ஷாஜிக்கு இரண்டு வாக்குகள் உள்ளதாக அவரது அடையாள அட்டைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாரதிய சிச்சார கேந்திரத்தின் முன்னாள் நிர்வாகியும், ஆர்எஸ்எஸ் தலைவருமான கே.ஆர்.ஷாஜியிடம் இரண்டு வாக்காளர்அடையாள அட்டைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு இரண்டு வாக்காளர் அட்டைகள் எப்படி கிடைத்தது என்று தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும் என்று கே.ஆர்.ஷாஜி கூறினார். இரண்டு எண்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது கடுமையான குற்றமாகும். எனவே, கேரளாவில் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.