தமிழ்நாட்டில் பாமக தலைமையில் புதிய அணியா?- அன்புமணி பேச்சால் குழப்பம்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில்  பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், என் மீது நம்பிக்கை வைத்து ஓராண்டு காலம் பொறுப்பில் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி. பொறுப்புகள் பதவிகளை எதிர்பார்ப்பவன் நான் அல்ல என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாமகவின் முக்கிய நோக்கமாக உள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு தொண்டர்கள் விருப்பப்படியும், தமிழ்நாட்டின் நலனுக்கு ஏற்ப மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம். இந்தக் கூட்டணி தேர்தலுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமூக நீதி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி இந்தக் கூட்டணி செயல்படும் என்று கூறினார்.

பாஜக கூட்டணியில் சேர பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விரும்பும் நிலையில் அதற்கு பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மெகா கூட்டணியை அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று கூறியுள்ளது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைமையில் தனி அணி அமைய உள்ளதா அல்லது வேறு கூட்டணியில் பாமக சேரப்போகிறதா என்ற குழப்பம் தான் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிக்கு வருவோம் என்றால் பாமக தலைமையில் தனி அணி வரும் தேர்தலில் மோதும் என்று அன்புமணி கூறுகிறாரா என்ற குழப்பத்தில் பாமக தொண்டர்கள் உள்ளனர்.

Related Posts

இடி, மின்னலுடன் 24 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்…

திமுகவில் புதிய பொறுப்பு- அன்வர் ராஜாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்!

திமுகவில் சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவிற்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா, பாஜகவை ஆரம்ப முதலே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதன் காரணமாக கடந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *