அதிர்ச்சி… நாமக்கல்லில் கடன் தொல்லையால் 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை

வீடு கட்ட வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தனது மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தாஜ்(36). இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சமீபத்தில் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கி புதிய வீட்டினை கோவிந்தராஜ் கட்டியதாக கூறப்படுகிறது. வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கோவிந்தராஜ் தவித்து வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த கோவிந்தராஜ், , தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ (9), ரித்திகாஸ்ரீ (7), மற்றும் தேவஸ்ரீ ( 3) ஆகியோரை வெட்டிக் கொலை செய்தார். இதன் பின் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடைபெற்ற போது தனது மனைவி பார்வதி, மகன் அக்னீஸ்வரன் ஆகியோரை ஒரு அறையில் கோவிந்தராஜ் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த மங்களபுரம் போலீஸார் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுபபி வைத்தனர். கடன் தொல்லையால் தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்குமா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மூன்று மகள்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் பரபரப்பு- 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி…

நெல்லையில் அவதூறு பேச்சு- ஷியாம் கிருஷ்ணசாமி மீது வழக்கு

நெல்லை கவின் கொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *