அதிர்ச்சி… நாமக்கல்லில் கடன் தொல்லையால் 3 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை

வீடு கட்ட வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தனது மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தாஜ்(36). இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சமீபத்தில் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கி புதிய வீட்டினை கோவிந்தராஜ் கட்டியதாக கூறப்படுகிறது. வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கோவிந்தராஜ் தவித்து வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த கோவிந்தராஜ், , தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ (9), ரித்திகாஸ்ரீ (7), மற்றும் தேவஸ்ரீ ( 3) ஆகியோரை வெட்டிக் கொலை செய்தார். இதன் பின் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடைபெற்ற போது தனது மனைவி பார்வதி, மகன் அக்னீஸ்வரன் ஆகியோரை ஒரு அறையில் கோவிந்தராஜ் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த மங்களபுரம் போலீஸார் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுபபி வைத்தனர். கடன் தொல்லையால் தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்குமா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மூன்று மகள்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

ஷாக்…. பிரபல மருத்துவமனையில் நர்ஸ் மர்ம சாவு!

பிரபல தனியார் மருத்துவமனையின் குளியலறையில் நர்ஸ் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் சந்திரசேகர் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி ரவுத் என்ற…

சாத்தூர் அருகே பயங்கரம்- பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன் . இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *