ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பிரபல குற்றவாளி- சுற்றி வளைத்த போலீஸ்!

மிரட்டி பணம் பறித்தல், கலவரம் செய்தல் உள்பட 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த போது போலீஸாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அதர்தல் பகுதியைச் சேர்ந்தவர் அபய் கனௌஜியா. ஜபல்பூரின் பிரபல குற்றவாளியான இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கலவரம் செய்தல் உள்பட 11 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், பனகரில் உள்ள சுர்மாவா காட்டுப்பகுதியில் உள்ள ரிசார்ட்டில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பனகர் காவல் நிலைய போலீஸார் அந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்தனர்.

ஆனால், துப்பாக்கியைக் காட்டி போலீஸாரை அபய் மிரட்டினார். பிடித்தால் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். ஆனால், போலீஸார் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அப்போது அவரிடம் துப்பாக்கி மட்டுமின்றி தோட்டாக்களும் இருந்தன. எதற்காக துப்பாக்கியுடன் அவர் பதுங்கியிருந்தார், யாரைக் குறிவைத்து அவர் பனகர் வந்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜபல்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!

தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *