மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? : அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

நடைபயிற்சியின் போது லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று வழக்கம் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனினும் அவர் அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது வழக்கமான நடைபயணத்தின்போது லேசான தலைச்சுற்றல் உணர்ந்துள்ளார். அவரது அறிகுறிகளை ஆய்வு செய்வதற்கும், தேவையான நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Related Posts

    இடி, மின்னலுடன் 24 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்…

    தமிழ்நாட்டில் பாமக தலைமையில் புதிய அணியா?- அன்புமணி பேச்சால் குழப்பம்

    வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில்  பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *