“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!

உத்தரபிரதேசத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த கும்பல், வீட்டக்குள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு விட்டு நிதானமாக படுத்து உறங்கி மறுநாள் பொறுமையாக தப்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 
வீடு புகுந்து கொள்ளையடித்தோமா? தப்பி ஓடினோமா? என இல்லாமல் தற்போதெல்லாம் திருடர்கள் திருடப்போன இடத்தில் தூங்கி எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு நிதானமாக நடந்து செல்லும் புதுவிதமான ட்ரெண்ட் செட்டை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித பதற்றமோ, பயமோ, இல்லாமல் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது போல், திருடச் செல்லும் இவர்கள் கொடுக்கும் அலப்பறை போலீசாரையே சற்று கொதிப்படையத் தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங். இவர் தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று இருந்தார். இதை நோட்டம் விட்ட திருட்டுக்கும்பல் ஒன்று ஜென் நிலையில், லக்னோவில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அடிக்கிற வெயிலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீடு புகுந்து கொள்ளையடிக்க முடியாது என்ற மனநிலையில் இருந்த அந்த திருட்டுக்கும்பல் வீட்டுக்குள் நுழைந்ததும் ஏசியை போட்டு விட்டு ஆர அமர உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகியுள்ளனர்.

  • Related Posts

    பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் ஆடிப்போன பாதுகாவலர்கள்!

    தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த…

    நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *